பொதுவாகவே உடலுக்கு அசைவு தரும் ஏதாவது ஒரு பயிற்சியை தொடர்ந்து மேற்கொள்வது உடல்நலத்துக்கும், மனநலத்துக்கும் நன்மை தரும் என பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கொரோனா பரவி, ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, நாம் அனைவரும் வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளோம். இந்த கடினமான நேரத்தில் நமது உடலசைவின்மையால் நம் ஆரோக்கியத்துக்கு வரும் பாதிப்புகளைப் பற்றி பல மருத்துவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பின்னனியில், உடல் ஆரோக்கியத்தையும், உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தையும் இந்த யோகா தினத்தில் மனதில் கொண்டு யோகா மட்டுமல்ல ஏதோ ஒரு வகை உடற்பயிற்சியை செய்யத்தொடங்குங்கள்.
நாளை வரை காத்திருக்கத் தேவையில்லை - இன்றே தொடங்கலாமே?



Comments
Post a Comment