Skip to main content

உதவிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் - DPAC+வியாசை தோழர்கள்+சாரல் அறிக்கை

 

நன்றி அல்ல …. வாழ்த்து!

       நாட்டுப்பற்று, மக்கள்ப்பற்று, பகுத்தறிவு, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை இளம் தலைமுறையிடம் உருவாக்க நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். இந்த சூழலில் கொரோனா தாக்கியது. நாம் நிவாரண வேலைகளில் இறங்க வேண்டிய கட்டாயம் வந்தது.


மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது நாடு. பெருந்தொற்றால் மடிந்து கொண்டிருக்கிறார்கள் மக்கள். ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது. என்ன செய்வது? எங்கிருந்து தொடங்குவது? என தெரியவில்லை. இருக்கும் இடத்தில் இருந்து தொடங்குவோம். இருப்பதைக் கொண்டு தொடங்குவோம்.

ந்த வகையில் கடந்த 2 வாரங்களாக செயல்பட்டு வருகிறோம். சாரலைச் சேர்ந்த நாம் பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC) உடன் இணைந்து வேலை செய்கிறோம்.

 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்ய உதவுவது, மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுத் தருவது, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருத்துகளை வாங்கித் தருவது, நோயால் தாக்கப்பட்டவர்களிடம் ஆறுதலாக பேசுவது, நம்பிக்கையூட்டுவது, ஆல்பம்-30 மருந்தை விநியோகிப்பது, வேலை இழந்து வாடும் உழைப்பாளிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்குவது ஆகிய வேலைகளை செய்து வருகிறோம். தற்போது வியாசைத் தோழர்களுடன் இணைந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் தொடங்கி உள்ளோம்.

       நாம் செய்யும் வேலை நமது சக்தியை மீறியது. நண்பர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியம் இல்லை. அந்த வகையில் ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓடுவதற்கு முக்கியமான காரணமாக இருந்தது பம்மல்-சங்கர் நகர் நண்பர்களின் பங்களிப்பு.



       அவர்களுக்கு நம்மைப் பற்றி நேரடியாகத் தெரியாது. ஒரு நண்பர் மூலமாக கேள்விப்பட்டு நம்மோடு கரம் கோர்த்துள்ளனர். திரு.கணபதி, திருமதி.மீரா, திருமதி.லஷ்மி,  திரு.நல்லமுத்து,  திரு.சத்தியநாராயணன் ஆகியோர் இணைந்து 50,000/- ரூபாய் வழங்கியுள்ளனர்.

       ஆட்டோ ஆம்புலன்ஸ் ஓடுவதற்கு இந்த நண்பர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது. நாம் இவர்களுக்கு நன்றி சொல்லி அந்நியமாக்க மாட்டோம். வாழ்த்து சொல்லி நம்மோடு இணைத்துக் கொள்வோம்.

எங்களின் சமூக் கடமையில் கரம் கோர்த்துள்ள பம்மல்-சங்கர் நகர் நண்பர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!    

   நாட்டையும், மக்களையும் “வுட்ர மாட்டோம்”. 

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

-வியாசைத் தோழர்கள்

-சாரல்  

 

 

Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...