Skip to main content

ஒன்றுபடுவோம் - DPAC+சாரல் அறிக்கை

 

ஒன்றுபடுவோம்!








       நாங்கள் குரோம்பேட்டை பகுதி இளைஞர்கள். நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா எதிர்ப்பு வேலைகளை செய்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்த மூன்று பேர் கொரோனா-வால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.  பாதிப்பு தீவிரமாக இருந்தது.  

       தீவிர பாதிப்பில் இருந்த இரண்டு பேரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றோம். இருவரையும் சி.டி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். இருவருக்கும் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தோம். மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தோம்.  இறுதியாக பல்லாவரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரு வார  சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக தேறி வருகின்றனர்.          

மிதமான பாதிப்பில் இருந்த ஓருவரை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளோம். இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்துகள் வாங்கித் தருகிறோம்.

இவர்கள் மூன்று பேரிடமும் தொடர்ந்து பேசி நம்பிக்கையூட்டி வருகிறோம். இந்த நோயைப் பொறுத்த வரை நம்பிக்கை தானே முதல் மருந்து.

இதன் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆர்சனியம்-ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மக்களிடம் விநியோகித்தோம். சுமார் 100 பேரிடம் இந்த மருந்து கொடுத்துள்ளோம்.    

நாங்களும் தொடங்கி விட்டோம். எல்லோரும் தொடங்குங்கள்! இன்றே தொடங்குங்கள்! நமது ஒன்றுபட்ட தாக்குதல்களால் கொரோனாவை நொறுக்கலாம்!

நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “ஒன்றுபடுங்க”  

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், குரோம்பேட்டை  

 





Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...