ஒன்றுபடுவோம்!
நாங்கள் குரோம்பேட்டை பகுதி இளைஞர்கள். நாங்கள்
கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா எதிர்ப்பு வேலைகளை செய்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்த
மூன்று பேர் கொரோனா-வால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பாதிப்பு தீவிரமாக இருந்தது.
தீவிர பாதிப்பில் இருந்த இரண்டு பேரை பரிசோதனைக்கு
அழைத்துச் சென்றோம். இருவரையும் சி.டி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். இருவருக்கும் நுரையீரல்
கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க
முயற்சித்தோம். மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயற்சி செய்தோம்.
இறுதியாக பல்லாவரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில்
சேர்த்தோம். ஒரு வார சிகிச்சைக்கு பிறகு படிப்படியாக
தேறி வருகின்றனர்.
மிதமான பாதிப்பில் இருந்த ஓருவரை மருத்துவர்களின் ஆலோசனையின்
பேரில் வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளோம். இவருக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்
மருந்துகள் வாங்கித் தருகிறோம்.
இவர்கள் மூன்று பேரிடமும் தொடர்ந்து பேசி நம்பிக்கையூட்டி
வருகிறோம். இந்த நோயைப் பொறுத்த வரை நம்பிக்கை தானே முதல் மருந்து.
இதன் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆர்சனியம்-ஆல்பம்-30
என்ற ஹோமியோபதி மருந்தை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மக்களிடம் விநியோகித்தோம்.
சுமார் 100 பேரிடம் இந்த மருந்து கொடுத்துள்ளோம்.
நாங்களும் தொடங்கி விட்டோம். எல்லோரும் தொடங்குங்கள்! இன்றே
தொடங்குங்கள்! நமது ஒன்றுபட்ட தாக்குதல்களால் கொரோனாவை நொறுக்கலாம்!
நாட்டையும், மக்களையும் “வுட்ராதீங்க” …… “ஒன்றுபடுங்க”
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-சாரல், குரோம்பேட்டை







Comments
Post a Comment