Skip to main content

உயிர்க் காற்று

 

                           


”மூச்சு விட முடியவில்லை. தயவு செஞ்சு வர முடியுமா?”

அழைப்பு வந்தது தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து. குரலில் இருந்த பதட்டம் நம்மைப் பதற வைக்கிறது. ஆட்டோ ஆம்புலன்ஸ் பாய்கிறது.  

தனலட்சுமி என்ற வயதான பெண்மணி. கோவிட் பாசிட்டிவ் நோயாளி. மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை. இப்போது, தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிஷனுக்காக காத்துக் கிடக்கிறார். அட்மிஷனுக்கு சில மணி நேரம் ஆகலாம். அதற்குள் மூச்சு முட்டுகிறது.  

நாம் சென்ற போது மூச்சுத் திணறிக் கிடந்தார். ஆக்சிஜன் அளவு பார்த்தோம். 74 என காட்டியது. மிக அபாயமான கட்டம். நமக்குள் நடுக்கம் பாய்கிறது. நிதானப்படுத்திக் கொள்கிறோம்.

ஆக்சிஜன் மாஸ்க் அணிவித்தோம். அவர் இருந்த காரை விட்டு இறங்க முடியவில்லை. ஆட்டோவில் இருந்து காருக்கு ஆக்சிஜன் இணைப்பு கொடுத்தோம். அளவை சரியாக வைத்தோம்.




ஆக்சிஜன் இல்லாமல் துடித்துக் கொண்டிருந்த நெஞ்சுக் கூட்டிற்குள் உயிர்க் காற்று பாய்ந்தது. உயிரோட்டம் கூடியது. இரண்டு மணி நேர போராட்டம். ஆக்சிஜன் அளவு 98-க்கு உயர்ந்தது. அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் உயிர் வந்தது.

அந்தத் தருணத்தில் அவருக்கு அட்மிஷன் கிடைத்து விட்டது. நமது வேலை முடிந்து விட்டது. விடை பெறும் போது அவரால் பேச முடியவில்லை. கண்கள் பேசின. ”காப்பாற்றி விட்டீர்கள்! நன்றி.”   

”காப்பாற்றுவோம்”  “வுட்ர மாட்டோம்”

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

 

Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...