Skip to main content

எனர்ஜி கொடுக்கும் – வியாசர்பாடி!

 



       செம்ம என்ர்ஜியில் இருக்கிறோம். இன்று வியாசர்பாடி சென்று வந்தோம். DPAC & வியாசைத் தோழர்களின் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை மையத்தைப் பார்த்தோம். உடலிலும் மனதிலும் எனர்ஜி பாய்ந்தது. மெய் சிலிர்த்தது. கண்கள் கசிந்தன.

       அணி வகுத்து நிற்கும் ஆட்டோக்கள். உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள். மக்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் மாணவிகள். அழைப்புகளுக்கு பதில் சொல்லும் தொண்டர்கள். அழைப்பு வந்ததும் பாய்ந்து செல்லும் ஓட்டுநர்கள். ஆக்சிஜனை நிரப்ப ஓடியாடும் நிர்வாகிகள். தக்க சமயத்தில் தேநீரும், உணவும் கொடுக்கும் தொண்டர்கள் ….. இது தான் இலவச ஆம்புலன்ஸ் சேவை மையம்.

       இல்லை. இது மட்டுமில்லை. 25 இளைஞர்களின் முடிவற்ற எனர்ஜி. இது தான் DPAC & வியாசைத் தோழர்களின் இலவச ஆம்புலன்ஸ் சேவை மையம்.



       ”முன்னாடி அண்ணன்கள் தான் கஷ்டமான வேலைகளை செய்வாங்க. இப்போ நாங்க பாதி வேலை செய்யுறோம். சமமா இருக்கிறோம்.” என்று பெருமை பொங்கும் லாவண்யா, திரிஷா, ரஸியா பானு, ஆர்த்தி.

       மையத்தை உருவாக்கும் போது, தகரம் கிழித்து ரத்தம் சொட்டியது. அந்த வலியிலும் ஆக்சிஜன் சிலிண்டருக்காக அலைந்த வீரநரசிம்மன்.



       வீடு, வீடாக சென்று முடி வெட்டி, அதில் கிடைக்கும் வருமானத்தை ஆம்புலன்ஸ் மையத்திற்கு அளிக்கும் கவி.

       இது போல நமக்கு எனர்ஜியை அள்ளிக் கொடுக்கும் இன்னும் பல சூரியன்களைப் பற்றி நாளை எழுதுவோம். இன்றைய அனுபவத்தை இப்படி சொல்லலாம். இது வேற, வேற, வேற லெவல்.

       இனி தைரியமாக சொல்லலாம்.

“வுட்ர மாட்டோம்”. 


-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

-சாரல்  

Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...