ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன்
கான்சடிரேட்டர் உள்ளிட்ட மருத்துவக் கருவிகளை நன்கொடையாக மக்களுக்கு வழங்க உள்ளார்கள்
திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்கள்.
இதயம் இயங்க சுவாசம் தேவை. நாட்டின் இதயம் சுவாசம் இல்லாமல்
தவிக்கிறது. உடனடியாக ஆக்சிஜன் வேண்டும். மருந்துகள் வேண்டும். கருவிகள் வேண்டும்.
எல்லாவற்றையும் விட உதவி செய்யும் நல்ல மனங்கள் வேண்டும்.
அத்தகைய நல்ல மனம் கொண்டவர்கள் திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்கள்.
இவர்கள் கொரோனா எதிர்ப்புப் போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்
கொண்டார்கள். பத்து ஆக்சிஜன் கான்சன்டிரேட்டர்கள், ஐம்பது ஆக்சிமீட்டர்கள், ஐம்பது
தெர்மல் ஸ்கேனர்கள், ஐம்பது PPE Kit உள்ளிட்டவற்றை வாங்கினார்கள். இவற்றை பேரிடர்
மக்கள் உதவி மையம் (DPAC) மற்றும் சாரலிடம் ஓப்படைக்க உள்ளார்கள்.
இந்த உயிர் காக்கும் கருவிகளை கொரோனா எதிர்ப்புப் போராட்டத்தில்
ஈடுபடுத்துவோம். இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவோம். அதிகபட்சமான மக்கள்
பயனடைய செய்வோம்.
இந்தப் பொருட்களின் மொத்த மதிப்பு ஏழு லட்சம் ரூபாய்.
இந்தப் பெரிய தொகையை மக்களுக்காக ஒதுக்கியுள்ள திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும்
அவர்களின் நண்பர்கள் பெரிய முதலாளிகள் அல்ல. இவர்கள் தங்கள் சம்பளப் பணத்தை ஒன்று சேர்த்தார்கள்.
இந்த பெரிய தொகையை சிரமப்பட்டுத் திரட்டினார்கள்.
இவர்கள், நாட்டின் இதயத்திற்கு சுவாசம் அளிக்கும்
திருப்பணியை செய்துள்ளார்கள். இதற்கு எவரும் எளிதாக நன்றி சொல்ல முடியாது. இவர்களின்
கொடை உள்ளம் நாட்டுக்கே முன்மாதிரி. இத்தகைய பங்களிப்புகளின் மூலமாகத்தான் கொடிய கொரோனாவை
நாம் வெல்ல முடியும்.
திருமதி.வைஷ்ணவி, திரு.வினோத் மற்றும் அவர்களின் நண்பர்களே!
உங்களுக்கு எங்களின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
உங்களின் உதவி நாட்டின் சுவாசமாக மாறும். பலரின் உயிரைக்
காக்கும். அந்த உயிர்கள் உங்களுக்கு நன்றி சொல்லும்.
வாருங்கள்! கரம் கோர்ப்போம்!
நாட்டையும், மக்களையும் “வுட்ர மாட்டோம்”.
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)
- சாரல்



Comments
Post a Comment