Skip to main content

காப்பாற்றுவோம்! தொடர்ந்துக் காப்பாற்றுவோம்!!

 



சிரமப்பட்டு மூச்சு விடுகிறார். பெயர் முகமது ஷெரிப். வயது 80. இடம் திரு.வி.க நகர். வாடி வதங்கிக் கிடக்கிறார்.

ஆக்சிஜன் ஆட்டோவை அழைக்கிறார்கள். உடனே வந்து விட்டார் பரத். ஆக்சிஜன் அளவு 78. தொடர்ந்து இறங்கி வருகிறது. ஆக்சிஜன் மாஸ்க் அணிவிக்கிறார். உயிர்க் காற்று பெரியவரின் நெஞ்சுக்குள் பரவுகிறது.  

இரண்டு மணி நேரம். மூச்சுத் திணறல் நின்று விட்டது. பெரியவரின் முகத்தில் மெதுவாக உயிர்க் களை அரும்புகிறது. பெரியவரிடம் சிறிது நேரம் அமைதி. பின்னர் குலுங்கி அழுகிறார். 

”ரெண்டு நாள் முன்னாடி உங்களைப் பார்த்து இருந்தா என் பொண்டாட்டியைக் காப்பாத்தி இருக்கலாமே. உங்களைப் பத்தி தெரியாமப் போச்சே ……..”

இரண்டு நாள் முன்னர் அக்சிஜன் கிடைக்காமல் பெரியவரின் மனைவி இறந்து விட்டார். பரத்துக்கு மனம் கலங்குகிறது. பெரியவரைத் தேற்றுகிறார். பெரியவரின் குடும்பத்திடம் இருந்து விடை பெறுகிறார்.

இம்மாதத் தொடக்கத்தில் பரத்துக்கு புதிதாக வேலை கிடைத்தது. அந்த வேலையை பரத் விட்டு விட்டார். அப்போது தன் தாயிடம் பரத் இப்படி சொன்னார்.


”வேலைக்குப் போனா பணம் தான் கிடைக்கும். பணத்தால உயிரைக் காப்பாத்த முடியுமா? நான் ஜனங்களோட உயிரைக் காப்பாத்தப் போறேன்.”

பல உயிர்களைக் காப்பாற்றி விட்டார் பரத்.      

”தொடர்ந்துக் காப்பாற்றுவோம்”  “வுட்ர மாட்டோம்”

-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...