”இது சாத்தியம் இல்லை.” ஆட்டோ ஆம்புலன்ஸ் பற்றி
நாம் பேசிய போது, முதலில் தோன்றிய கருத்து இது.
இது எப்படி சாத்தியம் ஆனது? ஆட்டோ ஆம்புலன்ஸ்
சேவை தொடங்கிய பிறகு எல்லோரும் கேட்கும் கேள்வி இது.
இந்த சேவையை செய்யும் இளைஞர்கள் தாங்கள் செய்யும்
வேலையின் அபாயத்தை உணர்ந்து தான் செய்கிறார்களா? இவர்களுக்கு அச்சம் இல்லையா? இவர்களின்
குடும்பங்கள் தடுக்கவில்லையா?
இது நிறைய பேரின் கேள்விகள். கேள்வி கேட்கும்
எல்லோரும் உங்களைப் பாராட்டுகிறார்கள். நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் என நெஞ்சார
வாழ்த்துகிறார்கள். உங்களுக்காக இறைவனை வேண்டும் நல்ல உள்ளங்களும் இருக்கின்றன.
அருமை நண்பர்களே!
ஆட்டோ ஆம்புலன்ஸ் வீரர்களே!
எங்கள் வியாசைத் தோழர்களே!
உங்களின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலை வணங்குகிறோம்.
உயிரைப் பணயம் வைக்கும் உங்களுக்கு நன்றி சொல்லவோ, வாழ்த்து சொல்லவோ எங்களுக்கு தகுதி
இல்லை.
உங்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் இந்த நாடு நன்றி
சொல்லும். ஆம்! நாடு நன்றி சொல்லும்.
வீர இளைஞர்களே!
நாடு உங்களைக் கைவிடாது!
நாங்களும் உங்களை “வுட்ர மாட்டோம்”.
-பேரிடர் மக்கள் உதவி மையம் (DPAC)-
சாரல்

Comments
Post a Comment