Skip to main content

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

 கொரோனாவின் பக்க விளைவுகள் பல உண்டு. வறுமை அதிகரிப்பது அதில் ஒன்று. தினக் கூலிகளான கோடிக்கணக்கான உழைப்பாளிகளுக்கு லாக்டவுன் காலத்தில் வருமானம் இல்லை. இதனால் பலருக்கு உணவே பிரச்சனையாகி விட்டது.

 நம்மால் முடிந்தவரை சிலருக்காவது உணவு கொடுக்க முயற்சி செய்தோம். நமது கையிலும் எதுவும் இல்லை தான். ஆனால், முயற்சி திருவினையாக்கும் தானே. நாம் செய்து வரும் கொரோனா எதிர்ப்பு பணிகளைக் கேள்விப்பட்டவர்கள் உதவி செய்ய முன் வந்தனர். 


அவர்களில் ஒருவர் மதுரவாயல் அரோமா உணவக உரிமையாளர். உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவிட வந்தார். நேற்று இரவு, தனது உணவகத்தில் இருந்து 40 பொட்டலம் பிரியாணியை வழங்கினார். 

இதனை வளசரவாக்கம், போரூர், மதுரவாயல் பகுதிகளில் வீடில்லாமல் வீதிகளில் உறங்கும் உழைப்பாளிகளுக்கு கொடுத்தோம். நாற்பது பேரின் ஒரு வேளைப் பசியைப் போக்கிய அரோமா உரிமையாளருக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாற்பது பேரின் பசியைப் போக்கியது சிறிய தொடக்கம் தான். நீங்களும் முன் வந்தால் நான்கு கோடி பேரின் பசியைப் போக்கலாம். 

 நாட்டையும், மக்களையும் “வுட்றாதீங்க” …… “பசியைப் போக்கும் போரில் இறங்குங்க”  


#பேரிடர்_மக்கள்_உதவி_மையம்  (DPAC)


#வுட்றாதீங்க_Nevergiveup

Comments

Popular posts from this blog

பூமி தினத்தை முன்னிட்டு மரம் நடுதல்

Teaching sports with social responsibility was very important to create a valuable society. yes on earth day (22/04/2021) behalf of Vivek sir's vision our children's are planting saplings on their play ground. By Siragugal Hockey Club  

பாலம் - இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 13

”ரொம்ப நல்ல விசயம் பண்றே மாப்பிள” செல்பேசியில் பேசுவது யாரென தெரியவில்லை. பேசும் குரல் இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தைப் பாராட்டுகிறது. சுரேஷ்பாபுவின் செயல்பாடுகளைப் புகழ்கிறது. நினைவுகளைப் புரட்டிப் பார்க்கிறார். மங்கலான கடந்த காலத்தில் இருந்து குரலின் உருவம் எழுகிறது. அட! இவனா? சிறு வயது பழக்கம். அவ்வளவு நெருக்கம் இல்லை. வாழ்க்கைப் பயணத்தில் அவர் ஒரு பாதையில். சுரேஷ்பாபு வேறு பாதையில். இருவரும் பேசி ஏழு ஆண்டுகளாகி விட்டது.                          ***       ***  சுரேஷ்பாபு ஆட்டோ ஆக்சிஜன் மையத்தில் எல்லா வேலைகளையும் செய்கிறார். அவற்றை மறக்காமல் ஸ்டேட்டஸ் வைக்கிறார். பதிவுகள் செய்கிறார்.  நண்பர்கள் பகிர்கிறார்கள். இந்தப் பழைய நண்பர் பதிவுகளைப் பார்க்கிறார். இணைப்பில் வருகிறார். நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது.  அழைப்பு முடிந்த அடுத்த சில நிமிடங்களில் ஜி.பே மூலம் நன்கொடை அனுப்புகிறார்.                      ***      ...

உயிர் காப்பான் தோழன்

                                                       போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன். காவல் துணை ஆய்வாளர் பேசுகிறார். “வணக்கம். வியாசைத் தோழர்களா? ஒரு எமெர்ஜென்சி. அம்பேத்கர் கல்லூரிக்கு வர முடியுமா?”. ஆட்டோ ஆம்புலன்ஸ் சாலையில் பாய்கிறது. ஓட்டுவது யோகேஸ்வரன். கண் இமைக்கும் நேரத்தில் அம்பேத்கர் கல்லூரியில் ஆட்டோ ஆம்புலன்ஸ். சித்த வைத்திய மையம் அம்பேத்கர் கல்லூரியில் இயங்கி வருகிறது. பாபு என்ற கோவிட் நோயாளியின் நிலை சீரியசாகி விட்டது. நுரையீரல் பாதிப்பு கடுமையாக இருக்கிறது. ஆக்சிஜன் அளவு 82-க்கு இறங்கி விட்டது. மூச்சு விட முடியவில்லை. மரணத்தின் வாசலில் பாபு. இவரை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். கைவசம் ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் நம் உதவியை நாடியுள்ளார். யோகேஷ்வரன் பாபுவை ஆட்டோவில் ஏற்றினார். சுவாசம் ...