உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
கொரோனாவின் பக்க விளைவுகள் பல உண்டு. வறுமை அதிகரிப்பது அதில் ஒன்று. தினக் கூலிகளான கோடிக்கணக்கான உழைப்பாளிகளுக்கு லாக்டவுன் காலத்தில் வருமானம் இல்லை. இதனால் பலருக்கு உணவே பிரச்சனையாகி விட்டது.
நம்மால் முடிந்தவரை சிலருக்காவது உணவு கொடுக்க முயற்சி செய்தோம். நமது கையிலும் எதுவும் இல்லை தான். ஆனால், முயற்சி திருவினையாக்கும் தானே. நாம் செய்து வரும் கொரோனா எதிர்ப்பு பணிகளைக் கேள்விப்பட்டவர்கள் உதவி செய்ய முன் வந்தனர்.
இதனை வளசரவாக்கம், போரூர், மதுரவாயல் பகுதிகளில் வீடில்லாமல் வீதிகளில் உறங்கும் உழைப்பாளிகளுக்கு கொடுத்தோம். நாற்பது பேரின் ஒரு வேளைப் பசியைப் போக்கிய அரோமா உரிமையாளருக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாற்பது பேரின் பசியைப் போக்கியது சிறிய தொடக்கம் தான். நீங்களும் முன் வந்தால் நான்கு கோடி பேரின் பசியைப் போக்கலாம்.
நாட்டையும், மக்களையும் “வுட்றாதீங்க” …… “பசியைப் போக்கும் போரில் இறங்குங்க”
#பேரிடர்_மக்கள்_உதவி_மையம் (DPAC)
#வுட்றாதீங்க_Nevergiveup


Comments
Post a Comment