Skip to main content

மே-10 வட இந்திய சுதந்திரப்போரின் தொடக்கம்.

 


மே-10,1857 - இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிழக்கிந்திய கம்பெனியின் குரல்வளைகளில் சிப்பாய்கள் ஏறிமிதிக்கத் தொடங்கிய நாள், கம்பெனியின் படையில் இருந்த இந்திய சிப்பாய்கள் - வட இந்திய சுதந்திர போரை தொடங்கி வைத்த நாள். தன் ஆட்சி அதிகாரம் பறிபோகி விடுமோ என்கிற பயத்தில் கம்பெனி ஆட்சியை நீக்கிவிட்டு நேரடியாக ஆங்கிலேய அரசின் ஆளுகைக்குள் இந்தியாவை கொண்டு வரவைத்த வரலாற்று நிகழ்வு தொடங்கிய நாள். (கிழக்கிந்திய கம்பெனி என்பது ஆசியா மற்றும் இந்தியாவை வணிகத்தின் மூலம் அடிமைப்படுத்த ஆங்கிலேய அரசு உருவாக்கிய நிறுவனம்)

மே-9,1857 - மீரட்டில் தனது இந்திய சிப்பாய்களுக்கு மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு தடவிய துப்பாக்கி தோட்டாக்களை கம்பெனி தந்தது - இது அந்த வீரர்களின் மத உணர்வை தாக்கியது அதனால் அவர்கள் அந்த தோட்டாக்களை பயன்படுத்த மறுத்தனர் - பயன்படுத்த மறுத்த அனைவரும் வேலைநீக்கம் செய்யப்பட்டதோடல்லாமல், அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, இந்தப் பின்னனியில் தான் மே-10 ஆம் தேதி மீரட்டில் சிப்பாய்களின் கலகம் வெடித்தது - சிறைகள் தகர்க்கப்பட்டது - தங்களது தோழர்கள் அனைவரும் விடுதலை ஆனார்கள் - ஆங்கிலேயர்களுக்கு எதிரான கோபம் பீரிட்டெழுந்தது - அவர்களது கண்ணில் பட்ட ஆங்கிலேய அதிகாரிகளும் , சிப்பாய்களும் பிணமானார்கள்.


கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கிலேய அரசும் இந்த சிப்பாய் கலகத்தை விட - அதில் வெளிப்பட்ட இந்து-முஸ்லீம் ஒற்றுமையைக் கண்டஞ்சியது. சாதிகளாக, மதங்களாக பிரித்தாளும் தனது வழிமுறை இங்கே பயன்படவில்லை என்பதைக் கண்டஞ்சியது. இது வெறும் மதநம்பிக்கையை சீண்டியதால் வந்த கலகமில்லை என கிழக்கிந்திய கம்பெனிக்கும் ஆங்கிலேய அரசுக்கும் நன்கு புரிந்தது. இந்த சிப்பாய்கள் அனைவரும் கிழக்கிந்திய கம்பெனியின் மிதமிஞ்சிய வரிவிதிப்பால், கட்டற்ற சுரண்டலால் செல்லாக்காாசாக்கப்பட்டு, வாழ்க்கையை ஓட்ட வேறு தொழில் கிடைக்காமல் இராணுவத்தில் வந்து வேலைக்குச் சேர்ந்த விவசாயிகள், கைவினைஞர்கள் போன்றோர் தான்.

இராணுவத்தில் வேலை கொடுத்து சோறும், சீருடையும் வழங்கி பராமரிக்கப்பட்டு வந்தபோதும் கிழக்கிந்திய கம்பெனியின் கொடுமைகள் நினைவுகளை விட்டு அகலவில்லை, உள்ளூர கன்னறு கொண்டே இருந்தது. அந்த நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது ஆங்கிலேய ஆட்சியும், அதிகாரிகளும், சிப்பாய்களும் அவர்களை நடத்திய விதம் - “பன்றிகள் என்றும் நீக்ரோக்கள் என்றும்” இழிவாக அழைப்பதும் நடத்துவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது.



இவை அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து, புழுங்கிப் புழுங்கி மே-10,1857ல் சிப்பாய் கலகமாக - வட இந்திய சுதந்திரப்போராக வெடித்தது. மே-10,1857ல் தொடங்கிய இப்போர், ஜூலை 08,1859 வரை நீடித்தது. ஜான்சி ராணி, ஹஸ்ரத் மகல், நானா சாகேப் போன்ற பலரும் இதில் பங்கெடுத்துக்கொண்டனர்.



Comments

Popular posts from this blog

நிழல் தரும் மரம் இலவச ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் - தொடர் 12

  ”நான் எதுவுமே செய்யலை” இவர் சதீஷ். ஆக்சிஜன் ஆட்டோ போராளி. அழைப்பு வந்ததும் அத்தனை விரைவாக செல்வார். திணறும் நெஞ்சங்களுக்கு ஆக்சிஜன் தருவார். தவிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் தருவார்.  இது வரை இவர் காப்பாற்றியது? 21 உயிர்கள்.  ஆனால், இப்படி சொல்கிறார். “நான் எதுவுமே செய்யலை”                                                        ***                  *** துடிதுடிக்கும் நோயாளிகள். பதைபதைக்கும் சொந்தங்கள். ஆக்சிஜன் கொடுக்கும் அருமையான நிமிடங்கள். மருத்துவமனைகளில் நீண்ட வரிசைககள். இடம் கிடைக்காத அலைகழிப்புக்கள். அட்மிசனுக்கான போராட்டங்கள். இறுதியாக நன்றிப் பெருக்குகள். காலில் விழும் குடும்பங்கள்.   எதைப் பற்றியும் இவர் சொல்வதில்லை.                                             ...

சல்யூட் - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள்.

”ஏய் வரிசையில நில்ரா.” இது கம்பெனி செக்யூரிட்டி. அவர் முகத்தில் வெறுப்பு. இடம் கும்மிடிப்பூண்டி. ஆக்சிஜன் நிரப்பும் நிறுவனம். வரிசையில் நின்றவர்களின் வசதி அவர்களின் உடையில் தெரிகிறது.  சற்று குறைவான உயரம். மெலிந்த உடல். அச்சமடைந்த கண்கள். சாதாரண உடை. இது தான் அப்புராஜின் வெளித் தோற்றம். அப்புராஜுக்கு மற்றொரு முகம் உண்டு. வியாசைத் தோழர்களின் முன்னணியாளர். ஆக்சிஜன் ஆட்டோ சேவையின் ரத்த ஓட்டம். தக்க சமயத்தில் ஆக்சிஜன் கொடுத்து 8 உயிர்களைக் காப்பாற்றிய போராளி. “எங்கே இருந்துடா வர்ரே” இது மற்றொரு செக்யூரிட்டி. ”நாங்க வியாசைத் தோழர்கள்.” அப்புராஜ் ஆக்சிஜன் ஆட்டோ சேவையைப் பற்றி விளக்குகிறார். செக்யூரிட்டிகளுக்கு அதிர்ச்சி. ஆட்டோ எப்படி ஆம்புலன்ஸ் ஆனது? கொடிய கொரோனாவை எதிர்க்கும் துணிவு எப்படி வந்தது?                       ***       *** வேலை முடிந்து விட்டது. சிலிண்டர்களை ஆட்டோவில் ஏற்றுகிறார் அப்புராஜ். அவரை நோக்கி அவர்கள் வருகிறார்கள். 4 செக்யூரிட்டிகள். 2 சூப்பர்வைசர்கள். அணி வகுத்து நிற்கிறார்கள்.  மூத்...

வியாசையில் ஒரு குளிர் ஓடை - ஆட்டோ ஆம்புலன்சின் அனுபவங்கள் , தொடர் - 8

  மலை ஓடை. மலைச் சாரலில் ஓடும். பாறைகள் கசிந்து பெருக்கிய நீர். தெளிந்த நீர். பார்த்தால் மனதுக்கு இதம். கால் நனைத்தால் சுகம் . அது வியாசையில் பாய்கிறது. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்துக்கு வாருங்கள். அந்த நீரோடையைப் பார்க்கலாம். ஓடையின் பெயர் வீரநரசிம்மன் என்ற வீரா. இலவச ஆக்சிஜன் ஆட்டோ மையத்தின் முதுகெலும்பு. பிரச்சனைகள் வந்தால் கலங்காமல் வழி தேடுவார். பாறைகள் மோதினாலும் தன் வழியை எழுதிச் செல்லும் ஓடை போல. குழப்பங்கள் சூழும் போது தெளிவான முகம் காட்டுவார். தன்னைத் தானே துவைத்துக் கொண்டு தெளிவாகும் ஓடை போல. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். தாகம் தீர்க்கும் ஓடை போல. ஆட்டோ ஆக்சிஜன் மையம் அமைத்த முதல் நாள். இதை செய்ய முடியுமா என்ற நம்பிக்கையின்மை ஒரு பக்கம். எப்படி செய்வது என்ற குழப்பம் மறுபக்கம். அப்போதும் நம்பிக்கையூட்டினார். ஆரம்ப வேலைகளை செய்து காட்டினார். அன்று தகரம் கிழித்து கையில் ரத்தம் சொட்டியது. அப்போதும் முகத்தில் நிதானம்; தெளிவு. ஓய்வில்லாமல் ஓடை போல துள்ளித் தெறிக்கிறார். வாருங்கள் ஓடையோடு பயணிப்போம்.             ...